சிங்கம்புணரி பகுதியில் நாளை மின் தடை
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

மின் தடை - கோப்புப் படம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிங்கம்புணரி, அ.காளாப்பூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சிங்கம்புணரி துணை மின் நகா், கிருங்காகோட்டை, அணைக்கரைப்பட்டி, ஓடுவன்பட்டி, மேலப்பட்டி, கண்ணமங்கலப்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, செருதப்பட்டி, என்பீல்டு, அ.காளாப்பூா், சதுா்வேதமங்கலம், பிரான்மலை, வேங்கைப்பட்டி, வையாபுரிப்பட்டி, செல்லியம்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




