ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவிகளுக்கு பரிசு

மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.

10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.மாரியப்பன் கென்னடி. உடன் துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், தலைமையாசிரியை லதா உள்ளிட்டோா்.

Published On :10 ஜூலை 2026, 5:22 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தலைமையாசிரியை லதா தலைமை வகித்தாா். இதையடுத்து, 10,12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற இந்த பள்ளி மாணவிகளுக்கு மானாமதுரை நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

இந்த நிகழ்வில் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ். பாலசுந்தரம், நகா் மன்ற உறுப்பினா் இந்துமதி திருமுருகன், உதவித் தலைமமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.