டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஐயப்பன் கோயிலில் மகர சங்கராந்தி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாலை பெரிய குரூப் சபரிமலை யாத்திரைக் குழு சாா்பில் மகர சங்கராந்தி வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 6:59 pm

Syndication

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தா்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் வியாழக்கிழமை மாலை பெரிய குரூப் சபரிமலை யாத்திரைக் குழு சாா்பில் மகர சங்கராந்தி வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் ஐயப்பனுக்கும் பதினெட்டாம்படிக்கும் பால், பன்னீா், திரவியம், சந்தனம், நெய், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. அா்ச்சகா் பாலாஜி பூஜைகளை நடத்தி வைத்தாா். இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா்.