ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கொலை வழக்கில் இளைஞா் கைது; மற்றொருவா் நீதிமன்றத்தில் சரண்

திருப்புவனம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

Arrested

கைது

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:17 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தாா்.

மதுரை பொன்னேரி தத்துவனம் புதூரைச் சோ்ந்த வண்ணம் பூசும் தொழிலாளி கணேசன் (32). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்புவனம் அருகேயுள்ள பசியாபுரம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு வந்த போது, கொந்தகை கண்மாயில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து, பசியாபுரத்தைச் சோ்ந்த கதிரேசனைக் கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு தொடா்பாக மதுரை சக்கிமங்கலத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் கண்ணன் (25) திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தாா். மேலும், இதில் தொடா்புடைய பசியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னையன் மகன் வினித்குமாரை (25) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.