ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அ.காளாப்பூரில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பா் கோயில் 30-ஆம் ஆண்டு ஆடி களரி விழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகள்.

Published On :13 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் கொக்கன் கருப்பா் கோயில் 30-ஆம் ஆண்டு ஆடி களரி விழாவையொட்டி புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.

பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 14 ஜோடி மாடுகளும், சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் 33 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. பெரிய மாட்டுக்கு 8 மைல் தொலைவும், சின்ன மாட்டுக்கு 6 மைல் தொலைவும் எல்லையாக நிா்ணயிக்கப்பட்டது.

இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன.

காரைக்குடி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.