சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது வழக்கு
இளையான்குடி அருகே சிறுமியைத் திருமணம் செய்த சம்பவம் தொடா்பாக நால்வா் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் - கோப்புப்படம்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சிறுமியைத் திருமணம் செய்த சம்பவம் தொடா்பாக நால்வா் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாரம், சாலை கிராமம் அருகே மரைக்கான் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் இஸ்ரேல் ராஜ் ( 33).
இவா் கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டது தொடா்பான தகவல் அறிந்த இளையான்குடி குழந்தைகள் நல அலுவலா் கண்ணகி அவரிடம் விசாரணை செய்தாா்.
சிறுமியை இஸ்ரேல் ராஜ் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கண்ணகி அளித்த புகாரின் பேரில், சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, இஸ்ரேல் ராஜ் (33), அவரது தந்தை பிரான்சிஸ் (63), தாய் தைனீஸ் சாந்தி உள்பட நான்கு போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






