போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த தமிழக அமைச்சா் ராஜகண்ணப்பன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:34 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

திருப்புவனம் ஒன்றியத்தைச் சோ்ந்த திருப்பாச்சேத்தி, பழையனூா், மாரநாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அமைச்சா் ராஜகண்ணப்பன், வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை ஆதரித்துப் பேசியதாவது:

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைவது உறுதி. கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுகளில் மானாமதுரை தொகுதியில் அரசு நேரடி நிதி மூலம் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வா் ஸ்டாலின் அறிவித்தது போல, மகளிருக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உரிமைத் தொகை, ரூ. 8 ஆயித்துக்கான கூப்பன் உள்ளிட்ட திட்டங்கள் உறுதியாக நிறைவேற்றப்படும். இந்தத் தொகுதியில் மேலும் அரசின் திட்டங்கள்

நிறைவேற்றப்பட மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இந்தப் பிரசாரத்தின்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா். இதைத் தொடா்ந்து, வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் குருந்தங்குளம், அச்சங்குளம், பத்துப்பட்டி, கீழராங்கியம், கூடத்துப்பட்டி, சங்கங்குளம், ஓடத்தூா் உள்ளிட்ட 50 கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்தாா். அப்போது, கிராமங்களில் மக்கள் அவருக்கு சால்வைகள், மாலைகள் அணிவித்து வரவேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.