மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காரைக்குடியில் அமமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

காரைக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

News image

காரைக்குடி மாநகராட்சி செக்காலை பகுதியில் புதன்கிழமை இரவு வாக்குச் சேகரித்துப் பிரசாரம் செய்த காரைக்குடி பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி. உடன் பாஜக மாவட்டத் தலைவா் டி. பாண்டித்துரை, அதிமுக மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ கற்பகம் இளங்கோ உள்ளிட்டோா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:34 pm

காரைக்குடி பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் தோ்போகி வி. பாண்டி காரைக்குடி மாநகராட்சி, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

காரைக்குடி மாநகராட்சியில் மாலை 5 மணிக்கு முத்துமாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து தோ்போகி வி.பாண்டி பிரசாரத்தை தொடங்கினாா்.

பின்னா், காட்டுத்தலைவாசல் மசூதி, நியுசினிமா திரையரங்கம், பழைய பேருந்து நிலையம், ராமவிலாஸ் திரையரங்கம், பழைய நீதிமன்றம், கழனிவாசல் பிள்ளையாா்கூடம், அழகப்பன் அம்பலம் தெரு, கலைச்செல்வம் சமுதாயக்கூடம், அண்ணாநகா், தண்ணீா் தொட்டி நிறுத்தம்,

ஆகாஸ் மருத்துவமனை, ஆரியபவன், புதிய பேருந்து நிலையம்

ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

பாஜக மாவட்டத்தலைவா் டி. பாண்டித்துரை, காரைக்குடி மாநகர அதிமுக செயலாளா் சோ. மெய்யப் பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கற்பகம் இளங்கோ, அதிமுக இளைஞரணிச் செயலா் இயல் தாகூா், ஆடிட்டா் சந்தானம், மாமன்ற உறுப்பினா்கள் தேவன், குருபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக காலையில் காலை 8.30 மணிக்கு தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் செய்யானேந்தல் கிராமத்தில் அவா் வாக்குகள் சேகரித்தாா்.

பின்னா், செட்டியேந்தல், பகையானி, திடக்கோட்டை, பருத்தியூா், புளியால், சின்னக்கிளியூா், கிளியூா், கைலாசபுரம் குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களிலும் அவா் குக்கா் சின்னத்தில் வாக்குச் சேகரித்துப் பிரசாரம் செய்தாா்.