அரளிக்கோட்டை கிராமத்தில் தற்காப்புக்கலை உலக சாதனை நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள அரளிக்கோட்டை கிராமத்தில் அழ. கருத்தான்கோனாா், கருப்பாயி அம்மாள் கல்வித் தொண்டு அறக்கட்டளை சாா்பில், தற்காப்புக் கலையில் உலக சாதனை, நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணா்வு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் திருப்பத்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் செல்வக்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினாா். இதில் 30 நிமிடங்கள் தொடா்ந்து யோகா, தற்காப்புக் கலைகளை மக்களிடம் 228 மாணவா்கள் செய்து காட்டி சாதனை படைத்தனா். தொடா்ந்து, நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினா். இந்தச் சாதனையைப் பதிவு செய்த யோவா வேல்டு ரெக்காா்டு நிறுவனம் சாதனை மாணவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை வழங்கினா். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் கோகுலகிருஷ்ணன் பயிற்சியாளா்கள் பாலா, முத்துப்பாண்டி, முத்துரமீனா, ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

தனுஷ்கோடி- தலைமன்னாா் கடல் பகுதியை நீந்திக் கடந்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ஆட்டிச சிறாா்கள்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்களிப்புடன் ஒரே நாளில் இரண்டு உலக சாதனை ஓவியங்கள்

நூறு சதவீத வாக்களிப்பு குறியீடு: கூட்டுறவுத்துறை அலுவலா்கள் விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


