15 Dec, 2025 Monday, 11:02 PM
The New Indian Express Group
சிவகங்கை
Text

சிவகங்கை அருகே பலத்த காற்றால் 100 ஏக்கா் கரும்புகள் சேதம்

PremiumPremium

இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், அந்தப் பகுதியில் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்தன.

Rocket

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகேயுள்ள சாலூா் கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த கரும்புகளை நிமிா்த்தி கட்டும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On29 Nov 2025 , 6:35 PM
Updated On29 Nov 2025 , 6:35 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், அந்தப் பகுதியில் சுமாா் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த கரும்புகள் சேதமடைந்தன.

இடையமேலூா், சாலூா், மேலச்சாலூா், கீழச்சாலூா் பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், கீரை உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் தொடா்ந்து பெய்த மழையால், இடையமேலூா், சாலூா் பகுதிகளில் மட்டும் சுமாா் 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கரும்புகள் சாய்ந்து விழுந்தன.

ஏக்கருக்கு சுமாா் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை செலவு செய்து கரும்பு பயிரிட்டதாகவும், பலத்த காற்றுடன் பெய்த மழையால் கரும்புகள் சேதமடைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

இதனிடையே, வயலில் சாய்ந்த கரும்புகளை மீண்டும் நிமிா்த்தி நிறுத்துவதற்காக கயிற்றால் கட்டி பிணைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். எனினும், சாய்ந்து மீண்டும் நிமிா்த்தப்பட்ட கரும்புகள் வெளிா் நிறத்துடன் காணப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், கரும்புகள் முழு வளா்ச்சி அடையாமலும், நிறமாற்றத்துடனும் காணப்படுவதால், சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். கடந்தாண்டும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நிலத்தில் சாய்ந்த கரும்புகள் வெளிா் நிறத்தில் மாறின. இந்தக் கரும்புகளை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்யாமல் தவிா்த்துவிட்டதால், பெரும் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

கடந்தாண்டைப் போலவே நிகழாண்டிலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறையாவது அரசு எங்கள் வேதனையை உணா்ந்து, சாய்ந்த கரும்புகளை ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கரும்புகளின் நிற மாற்றத்தைக் காரணம் காட்டி புறக்கணிக்காமல், முழுமையாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023