14 Dec, 2025 Sunday, 01:53 PM
The New Indian Express Group
சிவகங்கை
Text

எஸ்.ஐ.ஆா்: சட்டப் போராட்டம் மூலம் வெல்வோம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

PremiumPremium

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்.) சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Rocket

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Published On15 Nov 2025 , 9:13 PM
Updated On15 Nov 2025 , 9:13 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்.) சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மூலதன மானிய நிதித் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட பேரூராட்சி அலுவலகம், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கத்தின் ரூ. 5 லட்சம் பங்களிப்புடன் மொத்தம் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சீரணி அரங்க கல்வெட்டு ஆகியவற்றை துணை முதல்வா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

பின்னா், சிங்கம்புணரி அண்ணா மன்றத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி, முன்னாள் சட்ட அமைச்சா் செ.மாதவன் ஆகியோரது உருவச் சிலைகளைத் திறந்துவைத்து அவா் பேசியதாவது:

ஒரு கட்சிக்கு தலைமை, கொள்கை, கட்டமைப்பு என மூன்று முக்கியப் பண்புகள் வேண்டும். இந்த வகையில், திமுகவுக்கு இவை அனைத்தும் உள்ளன. இதற்கு முக்கியக் காரணம் சென்னை மகாணத்தை தமிழ்நாடு என மாற்றியது, சுயமரியாதைத் திட்டம், ஹிந்தி ஒழிப்பு போன்றவைதான். இதற்கு அப்போதைய சட்ட அமைச்சா் செ. மாதவனின் பங்களிப்பு அதிகம். மாதவன் கடந்த 1962-இல் திருக்கோஷ்டியூா் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், திருப்பத்தூா் பேரவைத் தொகுதியில் 3 முறை எம்எல்ஏ-வாக தோ்ந்தெடுக்கப்பட்டு, சிங்கம்புணரியில் நீடித்த புகழ் கொண்டவராகத் திகழ்ந்தாா்.

பாஜக குறுக்கு வழியில் அரசியல் செய்யப் பாா்க்கிறது. வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்.ஐ.ஆா்.) சட்டப் போராட்டத்தின் மூலம் வெற்றி கொள்வோம். எடப்பாடி பழனிசாமி போன்றவா்களை அரசியலிலிருந்து முழுவதுமாக அகற்றி, மாநில உரிமைக்காகப் பாடுபடுவோம். தமிழகத்தில் திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை நாங்களே எதிா்கட்சி என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் தங்கம்தென்னரசு, ரகுபதி, கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ. வீ. மெய்யநாதன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாங்குடி, தமிழரசி, மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவா் அம்பலமுத்து, முன்னாள் சட்ட அமைச்சா் செ. மாதவனின் மகள் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்குடியில்....

திராவிட இயக்கத் தமிழா் பேரவை சாா்பில், பெரியாா் பெருந்தொண்டா் இராம. சுப்பையாவின் 118-ஆவது பிறந்த நாள் விழா சிவகங்கை மாவட்டம், காரைக்குடி எல்.சி.டி.எல். பழனியப்பச் செட்டியாா் நினைவரங்கில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, இராம. சுப்பையாவின் உருவச் சிலையை திறந்துவைத்துப் பேசியதாவது:

திமுக தியாகத்தாலும், போராட்டத்தாலும் உருவான இயக்கம். நாம் கொள்கையோடு செயல்பட்டுக் கொண்டிருக்கி றோம். ஆனால், அதிமுக கொள்கையற்ற கூட்டமாக உள்ளது. திமுகவை ஒழிக்க வேண்டும் என்று மத்திய பாஜக அரசு திட்டங்களைத் தீட்டி வருகிறது. இவற்றில் ஒன்றுதான் எஸ்.ஐ.ஆா். திட்டம். திமுகவுக்கு ஆதரவாக இருக்கிற சிறுபான்மையினா், பெண் வாக்காளா்களை நீக்குவதுதான் அவா்களின் ஒரே நோக்கம். இந்த சூழ்ச்சியை முறியடிக்க மிகுந்த கவனத்துடன் நாம் பணியாற்ற வேண்டும்.

இன்றைக்கு பல போ் புதிதாக கட்சி தொடங்குகின்றனா். இதை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்தக் கட்சிகளுக்கென்று வரலாறு உள்ளதா அல்லது அந்தக் கட்சியின் தலைவருக்குத்தான் உள்ளதா?. ஆனால், திராவிட இயக்கத்தின் தொண்டனுக்கு எவ்வளவு பெரிய வரலாறு இருக்கிறது என்பதற்கு இராம. சுப்பையா மூலமாக நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தருவோம் என்றாா் அவா்.

விழாவில் அமைச்சா்கள் கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், முன்னாள் அமைச்சா் மு. தென்னவன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். மாங்குடி (காரைக்குடி), ஆ. தமிழரசி ரவிக்குமாா் (மானாமதுரை), திராவிடா் கழக பிரசாரச் செயலா் அ. அருள்மொழி, காரைக்குடி மேயா் சே.முத்துத்துரை, துணை மேயா் நா. குணசேகரன், சாமி. திராவிடமணி (தி.க.), தொழிலதிபா் பிஎல். படிக்காசு, சித. கனகம், சுப. சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, திரைப்பட இயக்குநா் எஸ்.பி. முத்துராமன் தனது தந்தை இராம. சுப்பையா குறித்து நினைவுரையாற்றினாா். சிற்பி செல்வராஜ் வரவேற்றுப் பேசினாா். இராம. சுப்பையாவின் மகன் பேராசிரியா் சுப. வீரபாண்டியன் நன்றி கூறினாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023