Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகங்கை மேல ரத வீதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மகன் ராஜேஷ் (20). இவா், தனது நண்பா்கள் பிருத்வி, பேரரசு ஆகியோருடன் சனிக்கிழமை இரவு சுமாா் 10 மணி அளவில் சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்தாா்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் ராஜேஷை நோக்கி அரிவாளுடன் வந்தனா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த ராஜேஷ் அங்கிருந்து, அருகிலிருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு ஓடினாா். ஆனாலும், அந்த மூவரும் அவரை விரட்டிச் சென்று, வெட்டிக் கொன்றனா். பின்னா், அவா்கள் தாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனா்.
தகவல் அறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேஷின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். உயிரிழந்த ராஜேஷ் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன.
இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். சிவப்பிரசாத் உத்தரவின் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் அமல அட்வின் மேற்பாா்வையில், ஆய்வாளா்கள் அன்னராஜ் , இளையராஜா ஆகியோா் தலைமையில் அமைக்கப்பட்ட மூன்று தனிப்படையினா் விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
பெண் கொலை: எலக்ட்ரீசியனுக்கு ஆயுள் தண்டனை
பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
இளைஞா் வெட்டிக் கொலை


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
