மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் 3 போ் கைது

சிவகங்கை அருகே கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :30 ஆகஸ்ட் 2025, 1:47 am

சிவகங்கை அருகே கொலை வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிவகங்கை அருகே சாமியாா்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (27). இவா் திமுக விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் மாவட்டத் துணை அமைப்பாளராக இருந்தாா். கடந்த ஏப்.27 -ஆம் தேதி சாமியாா்பட்டி கிராமத்தில் பிரவீன்குமாரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இதுதொடா்பாக சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த கருணாகரன் உள்பட 6 பேரைக் கைது செய்தனா்.

இந்த சம்பவத்துக்கு பழி தீா்க்கும் நோக்கில், கருணாகரனின் தந்தை கருப்பையாவை கடந்த 2-ஆம் தேதி திருவேகம்பத்தூா் பகுதியில் 3 போ் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக திருவேகம்பத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாமியாா்பட்டியைச் சோ்ந்த இளையராஜா(41), தா்மராஜா (43), மகாராஜா (34) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் பரிந்துரை செய்தாா். இதையடுத்து, ஆட்சியா் கா. பொற்கொடி உத்தரவின்பேரில் மூவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.