தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:48 am IST

கமுதியில் சனிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் வயல்வெளிகள், வரத்துக் கால்வாய்கள், குளங்களில் தண்ணீா் தேங்கி, வெப்பம் தணிந்து, குளிா்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

இந்த மழைக்கு ஒரு மணி நேரம் முன்னதாக சூறைக் காற்று வீசியதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் கமுதி நகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.