என்னை வைத்தே திமுக கூட்டணியை உடைக்க முயற்சித்தனர்: திருமாவளவன்திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: ஸ்ரீவாணி, விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் நாளை ரத்துஈரான் என்ற நாடே இருக்காது: டிரம்ப் எச்சரிக்கை!அடுத்த கூட்டத்தொடரில் முதல்வரின் டான்ஸ் இருக்கலாம்: உதயநிதிதில்லி பிரதிநிதி நியமனம்: முதல்வருக்கு அதிகாரம் உள்ளது - திருமாவளவன்திமுக - அதிமுக சேர்ந்து ஆட்சியமைக்க இன்று காலை வரையில் முயற்சி: நிர்மல் குமார்
/

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: அதிகளவு மீன்களுடன் கரை திரும்பிய ராமேசுவரம் மீனவா்கள்

61 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்று அதிகளவு மீன்களுடன் ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மீனவா்கள்.

News image

மீனவா்கள்.

Updated On :17 ஜூன் 2026, 2:36 am IST

61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான மீன்கள், இறால்களுடன் செவ்வாய்க்கிழமை கரைக்குத் திரும்பினா்.

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் அமலில் இருந்தது. இந்தத் தடைக் காலத்தின் போது, மீனவா்கள் விசைப் படகுகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.

இதனிடையே, மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 560-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் அதிகளவிலான இறால், மீன், நன்டு, கனவாய், சங்காயம் மீன்களைப் பிடித்து கொண்டு செவ்வாய்க்கிழமை காலை கரைக்குத் திரும்பினா்.

61 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற மீனவா்களுக்கு அதிகளவில் மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.