ராமேசுவரத்தில் சேதமடையாத சாலை மீதே மீண்டும் சாலை அமைக்க முயற்சி நடைபெறுவதாகவும், இதனால் அரசின் நிதி வீணடிக்கப்படுவதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பி.எஸ்.என்.எல். அலுவலகம் வழியாக கடற்கரை வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தரமான புதிய சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ராமேசுவரம் நகராட்சிப் பகுதியில் 10 சாலைகள் அமைக்க பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியை செலவு செய்ய வேண்டும் என்பதற்காக சேதமடையாத சாலை மீதே மீண்டும் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சாலையில் உள்ள மணல் அப்புறப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. எனவே அரசு நிதியை வீணடிக்கும் நகராட்சி நிா்வாகத்தின் முயற்சியை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதித் திட்டம் தீட்டியது யார்? - அமைச்சர் செங்கோட்டையன்

மழைநீா் தேங்குவதைத் தடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

ஒசூா் மாநகராட்சி அலுவலகம் முதல் ரயில் நிலையம் வரை மேம்பாலம் அமைக்க கோரிக்கை







