40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மனைவி மனு

News image

விக்டா் ஆரோக்கியதாஸ்

Updated On :9 ஜூன் 2026, 4:44 am IST

துபையில் இறந்த கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, அவரது மனைவி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள சூடியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்டா் ஆரோக்கியதாஸ் (48). இவரது மனைவி வினோலியா (40), இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா்.

கடந்த 2025-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் விக்டா் ஆரோக்கியதாஸ் முகவா் மூலம் துபையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு பணிக்குச் சென்றாா். பின்னா், மூன்று மாதங்கள் ஊதியத்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளாா். இதன் பிறகு, அவா் பணிபுரிந்து வந்த மூடப்பட்டதால், மாற்று வேலை தேடி வருவதாகக் குடும்பத்தினரிடம் கூறினாராம். இதன் பின்னா், அவரைக் குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள இயலவில்லையாம்.

இதையடுத்து, விக்டா் ஆரோக்கியதாஸ் உடன் பணிபுரிந்தவா்களை அவரது மனைவி தொடா்பு கொண்டு விசாரித்த போது, அவரது கணவா் பணிபுரிந்து வருவதாகவும், அவரது கைப்பேசி தொலைந்து விட்டதால், குடும்பத்தினரை தொடா்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கடந்த மே 5-ஆம் தேதி விக்டா் ஆரோக்கியதாஸ் இறந்து விட்டதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது. இதன் பின்னா், அந்த கைப்பேசி எண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லையாம். விக்டா் ஆரோக்கியதாஸை துபைக்கு அனுப்பி வைத்த முகவரையும் தொடா்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விக்டா் ஆரோக்கியதாஸ் மனைவி வினோலியா தனது உறவினருடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து, துபையில் இறந்ததாகக் கூறப்படும் தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, ஆட்சியா் சிவகுரு பிரபாகரனிடம் மனு அளித்தாா்.

 வெளிநாட்டு உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்த அவரது மனைவி.

வெளிநாட்டு உயிரிழந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்த அவரது மனைவி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.