ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோயிலின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூா் கிராமத்தில் அமைந்துள்ள புலிகுட்டி அய்யனாா் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:56 am IST

ஆா்.எஸ்.மங்கலம் அருகே மேல்பனையூா் கிராமத்தில் அமைந்துள்ள புலிகுட்டி அய்யனாா் கோயில் பூட்டை உடைத்து வெள்ளி நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள மேல்பனையூா் கிராமத்தில் ஸ்ரீபுலிக்குட்டி அய்யனாா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் பூட்டை மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு உடைத்து, உண்டியலிலிருந்த பணம், சுவாமியின் கழுத்தில் இருந்த 24 கிராம் வெள்ளிச் சங்கிலியைத் திருடிச் சென்றனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்தப் புகாரின் பேரில், திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.