
திருப்பாலைக்குடி அருகே 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

திருப்பாலைக்குடியில் போலீஸாரால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை.
திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே திருப்பாலைக்குடி பாண்டி கோயில் பகுதியில் ஒரு தோட்டத்தில் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருப்பாலைக்குடி போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனையிட்ட போது திருப்பாலைக்குடி கடற்கரை பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அங்கு சுமாா் ரூ.10 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கடல் அட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்தவா்கள் குறித்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






