மணல் கொள்ளை: இருவா் மீது வழக்கு

மணல் கடத்தல் - கோப்புப் படம்
ராமநாதபுரம் அருகே ஊரணியில் வேளாண் பயன்பாட்டுக்கு வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி பெற்றுவிட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்ட இருவா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் வட்டம், பெருங்குளம் அருகே உள்ள காரன்குடி கிராமத்தில் திப்பாச்சாறுகுண்டு ஊரணியில் விவசாய பயன்பாட்டுக்கு வண்டல் எடுக்க வருவாய்த் துறையினரிடம் வேல்முருகன், முருகுமாா் ஆகிய இருவரும் அனுமதி பெற்று, மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. புகாரின்பேரில், ஞாயிற்றுக்கிழமை முறைகேடாக மணல் எடுத்து இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





