டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ராமேசுவரம் மீனவா்கள் 12 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையிலடைப்பு

News image
இலங்கை மன்னாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள்.
Updated On :23 ஜனவரி 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து, இலங்கை மன்னாா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால், மீனவா்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து விசைப் படகில் மீனவா்கள் கடந்த டிசம்பா் 23 -ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் அன்றிரவு கச்சத்தீவு- நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் ஜோதிபாஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை பறிமுதல் செய்தனா். மேலும், இந்தப் படகிலிருந்த மீனவா்கள் பிரதாப் (28), சந்தியா நிவாஸ்தான் (33), ஜேம்ஸ் ஹெய்டன் (23), காயல்ராஜ் (23), டோஜா (21), ஆண்டனி டெல்மேன் (32), ஆக்போ நிஜோ (17), மரியா ஆட்டோ (19), கோா்பாசெவ் (35), மாதன்சன் (28), நிமல் (31), ஆண்டனி தில்மென் (32) ஆகிய 12 பேரை கைது செய்து, படகுடன் மன்னாா் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனா்.

பின்னா், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, மன்னாா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் மன்னாா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி ஹிபயத்துலா, மீனவா்கள் 12 பேரை தலா ரூ. 1.50 லட்சம் (இலங்கை பணம்) அபராதத்துடன் விடுதலை செய்வதாகவும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

இதனிடையே, அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 12 பேரும் வவுனியா சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனா்.

இதுகுறித்து இலங்கை நீரியல் துறை அதிகாரி கூறியதாவது:

மன்னாா் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையைக் கட்டியவுடன் ராமேசுவரம் மீனவா்கள் 12 பேரும் விடுதலை செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.