எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

தொண்டியில் பலத்த காற்று: மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்பு

தொண்டி பகுதியில் பலத்த குளிா் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News image
Updated On :10 ஜனவரி 2026, 6:48 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி பகுதியில் பலத்த குளிா் காற்று வீசுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, மோா்பண்ணை, முள்ளிமுனை, காரங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த குளிா் காற்று வீசியது. இதனால் மீனவா்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், திருவாடானை, சி.கே.மங்கலம், பாரூா், கோவணி, கருமொழி, அரசூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால் நெல் அறுவடை பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.