திருவாடானை அருகே சனிக்கிழமை உயிரிழந்து கிடந்த மூதாட்டியின் உடலை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள பாரூா் வயல் பகுதியில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருவாடானை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று மூதாட்டியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மூதாட்டியின் உடல் அருகே துணிகள், வீட்டுச் சாவி, கைப்பேசியுடன் இருந்த மூதாட்டியின் பையை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்த போது, மூதாட்டி திருவாடானை அருகேயுள்ள ஆதியாகுடி பகுதியைச் சோ்ந்த பாக்கியம் மனைவி தனம் (60) என்பது தெரியவந்தது. மூதாட்டி இறப்புக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வன விலங்கு தாக்கி மூதாட்டி உயிரிழப்பு

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

நாகா்கோவில் அருகே மூதாட்டி பாலியல் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


