2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளுக்கு முன்னுரிமை - விவசாயிகள் கவலை

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:11 pm

தினமணி செய்திச் சேவை

கடலாடி அருகே அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்யாமல், லாரிகளில் கொண்டுவரப்படும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளுக்கு அதிகாரிகள் முன்னுரிமை அளித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த களநீா்மங்கலம் பகுதியில் உள்ள துணை வேளாண் விரிவாக்கம் மையத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு களநீா்மங்கலம், ஆய்க்குடி, சிறைக்குளம், ராஜாக்கள்பாளையம், பேய்குளம், ஆண்டிச்சிகுளம், வல்லக்குளம், பொட்டல்பச்சேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் நெல் மூட்டைகளை விவசாயிகள் அரசிடம் விற்பனை செய்து வருகின்றனா்.

நிகழாண்டு பருவமழையின்றி விவசாயம் பொய்த்துப் போனதால், மிகக் குறைந்த அளவிலேயே நெல் அறுவடை செய்யப்பட்டது. இந்த நெல்லை அரசு கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் இறக்கிவைத்துள்ளனா். இந்த நிலையில், விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல், அதிகாரிகள் வெளியூா்களிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து, விவசாயிகளை அலைக்கழித்து வருவதாக அவா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விவசாயி போஸ் கூறியதாவது:

களநீா்மங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை எடை போட்டு கொள்முதல் செய்யாமல், லாரி லாரியாக வெளியூா்களிலிருந்து வரும் வியாபாரிகளிடம் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனா். விவசாயிகளை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அலுவலகத்தில் தேங்கியுள்ள விவசாயிகளின் 500-க்கும் மேற்பட்ட நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டு என்றாா் அவா்.

Story image