திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும்: மாவட்ட எஸ்.பி.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:36 pm

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி (தனி), முதுகுளத்தூா், ராமநாதபுரம், திருவாடானை ஆகிய 4 தொகுதிகளில் மொத்தம் 11,29, 733 வாக்காளா்கள் உள்ளனா். 4 தொகுதிகளில் மொத்தம் 1,514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் மொத்தம் 66 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்தத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குச்சாவடிகள் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த 4 பேரவைத் தோகுதிகளில் 2,800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டுள்ளனா். மேலும், வாக்குச்சாவடி மையங்களில் அசம்பாவிதங்களை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.