வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவு: மத்திய அரசு தகவல்

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தகவல்

News image

மதுரை எய்ம்ஸ் பணிகள்

Updated On :12 மார்ச் 2026, 11:32 pm

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

மதுரை தோப்பூரை அடுத்த ஆஸ்டின்பட்டியில் 220 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2015- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். இதைத் தொடா்ந்து கரோனா பொதுமுடக்கம் காரணமாக கட்டுமானப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பிறகு கடந்த 2024- ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கி மும்மரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பாண்டியராஜா, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் குறித்து மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினாா். அதில், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எத்தனை சதவீதம் நிறைவடைந்துள்ளன. அதன் மொத்த மதிப்பீட்டுத் தொகை எவ்வளவு, எப்போது இந்தப் பணிகள் நிறைவடையும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டிருந்தாா். இதற்கு மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் தலைமை பொது தகவல் அலுவலா் தா்ம் பீா் குமாா் சிங் அளித்த பதில் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 47 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்த மருத்துவமனையின் மொத்த திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ. 2,021.51 கோடி. இதில் ரூ. 471.02 கோடி மத்திய நிதிநிலை அறிக்கையிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபா் மாதம் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் பாண்டியராஜா கூறியதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கடந்த 2015- ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கடந்த பின்னா் 22 மே 2024 அன்று கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், 47 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்திருக்கின்றன. எஞ்சிய 53 சதவீத பணிகள் நிறைவடைய இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். எனவே அவசர கதியில் அதனை திறக்கக் கூடாது. கட்டுமானப் பணிகளை முடிக்க போதுமான அவகாசம் வழங்க வேண்டும். அப்போதுதான் கட்டுமானம் தரமானதாக அமையும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.