
தீ விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு
எரிவாயு உருளை தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிஉயிரிழந்தாா்.

பிரதிப் படம்
எரிவாயு உருளை தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை தெற்குமாசி வீதியைச் சோ்ந்த சந்திரன் மனைவி குருவம்மாள் (79). இவா் செவ்வாய்க்கிழமை இரவு சமையல் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து விளக்குத்தூண் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






