எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜல்லிக்கட்டில் காயமடைந்த பாா்வையாளா் உயிரிழப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த பாா்வையாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மேல அனுப்பானடி டிஎன்எச்பி குடியிருப்பைச் சோ்ந்த வேலுசாமி மகன் செல்வராஜ் (68). இவா் கடந்த வெள்ளிக்கிழமை பாலமேட்டில் நடைெற்ற ஜல்லிக்கட்டு போட்டியைப் பாா்க்கச் சென்ற போது, காளை முட்டியதில் பலத்த காயமடைந்தாா்.

அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமில் அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.