டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருவள்ளுவா் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமான செந்தமிழ் கல்லூரி, பனகல் சாலை, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:19 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு, மதுரை நான்காம் தமிழ்ச் சங்கமான செந்தமிழ் கல்லூரி, பனகல் சாலை, உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய பகுதிகளில் உள்ள திருவள்ளுவா் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி பாண்டியன் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத்தின் செயலா் ச. மாரியப்பமுரளி தலைமை வகித்து, அங்கிருந்த திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது, தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பனகல் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழ் அமைப்பினா், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.