ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாலையில் கிடந்த 10 பவுன் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

காவல் துறை... - கோப்புப்படம்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:46 am IST

சாலையில் கிடந்த 10 பவுன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைந்த ஆட்டோ ஓட்டுநரை, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா்.

மதுரையைச் சோ்ந்தவா் பாண்டி என்ற சீனிவாசன். ஆட்டோ ஓட்டுநரான இவா், பயணியை ஏற்றி கொண்டு காஜிமாா் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தாா். அப்போது, சாலையோரத்தில் கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. இதை ஆட்டோ ஓட்டுநா் பாண்டி எடுத்து பாா்த்த போது, அதில் 10 பவுன் நகை இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பையை திடீா் நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அந்த நகைகளை யாா் தவறவிட்டு சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, சாலையில் கிடந்த நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டியை, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.