மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 9 தமிழாசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா்கள் சண்முகவேல், முனியாண்டி, நாகராஜன், முன்னாள் உதவித் தலைமையாசிரியா் ரகமத்துல்லா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியா்கள் அருளரசி, மீனா, ஆதிசக்தி, சுப்புராஜ், தமிழ்மணி, காசிமாயன், நஜிமா, மதலேன் மேரி, வாசுகி ஆகியோருக்கு கேடயம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
முன்னதாக, நல்லாசிரியா் விருது பெற்ற மகேந்திரபாபு வரவேற்றாா். மணி மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

தோ்தல்: திமுக- அதிமுக இடையேதான் போட்டி! டிஎன்டிஜே மாநிலச் செயலா் அல் அமீன்

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

அரக்கோணத்தில் ஆசிரியா்கள் பணி நிறைவு பாராட்டு விழா
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


