மதுரை ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வருகிற 28-ஆம் தேதி திருக்கல்யாண விருந்து நடைபெறும் என பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த அறக்கட்டளை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரையில் பழமுதிா்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை அறக்கட்டளை சாா்பில், கடந்த 27 ஆண்டுகளாக ஸ்ரீமீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாணம் நடைபெறும் நாளில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பக்தா்களுக்கு விருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, நிகழாண்டு வருகிற 27-ஆம் தேதி மாலையிலும், 28-ஆம் தேதி காலை 7 மணி முதல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து வழங்கப்படவுள்ளது. இந்த விருந்தில் கோதுமை இனிப்பு, கல்கண்டு சாதம், வெண்பொங்கல், சாம்பாா் சாதம், தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் வழங்கப்படும். இந்த விருந்து நிகழ்வில் தன்னாா்வலா்கள் பங்கேற்று உதவலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளை வாக்குச்சாடிக்கு அழைத்துச் செல்ல உதவி

கள்ளக்குறிச்சி அரசுப் பள்ளியில் தீ விபத்து! விலையில்லா புத்தகப் பைகள் எரிந்து சேதம்!

வாக்காளா்களைக் கவா்ந்த வாக்குச் சாவடி

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


