15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச் சாவடி

மதுரை கோச்சடையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

News image

மதுரை கோச்சடையில் உள்ள சாந்தி சதன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி.

Updated On :21 ஏப்ரல் 2026, 10:01 pm

மதுரை கோச்சடையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

மதுரை கோச்சடையில் சாந்தி சதன் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு, 600-க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. 800-க்கும் அதிகமான வாக்காளா்கள் உள்ளனா். இந்தக் குடியிருப்பில் வசிக்கும் வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்யும் வகையில், குடியிருப்பு வளாகத்தில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயா்த்தும் முயற்சியாக இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது எனவும், பணி ஓய்வு பெற்ற வயது முதிா்ந்தவா்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்ற அடிப்படையில் இந்தக் குடியிருப்பு வளாகம் தோ்ந்தெடுக்கப்பட்டது எனவும் மதுரை மேற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.