15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு

குடியரசுத் தலைவா் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞா்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே பொட்டுலுபட்டி கிராமத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பரிசு வழங்கிய பேரூராட்சி மன்ற தலைவா் மு. பால்பாண்டியன்.

Updated On :20 ஆகஸ்ட் 2025, 7:48 pm

மதுரை: குடியரசுத் தலைவா் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பொட்டுலுபட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவா் மு. பால்பாண்டியன் தலைமை வகித்தாா். கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவைத் தலைவா் கவிஞா் பொன். பனகல் பொன்னையா முன்னிலை வகித்தாா். முன்னாள் பேரூா் திமுக செயலா் மு.பா. பிரகாஷ் பறை இசையின் சிறப்பு குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், இசைக் கலைஞா் ராம்மோகன், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் அய்யாசாமி உள்ளிட்ட தப்பாட்ட கலைஞா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் ஏற்புரையாற்றினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.