திருச்சி சிறையில் இருந்த சிறைவாசி அதிகாரிகளால் தாக்கப்பட்டது தொடா்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த அங்கம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது மகன் ஹரிஹரசுதனை 2020-ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் என் மகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். பின்னா், என் மகன் ஐ.டி.ஐ. படிக்க விண்ணப்பித்தாா். படிப்புக்காக 6 மாதங்களுக்கு முன்பு அவா் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
அங்கு, 26.7.2025-இல் சிறை அறையில் படுத்திருந்த என் மகனை, ஏன் இங்கே படுத்திருக்கிறாய்? எனக் கேட்டு, துணை ஜெயிலா் லத்தியால் தாக்கினாா். சிறை வாா்டன்கள் அவரைக் கடுமையாகத் தாக்கினா். இதில் என் மகன் பலத்த காயமடைந்தாா். அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை அளிக்கக்கூடாது என அதிகாரிகள் கூறினா். இதேபோல, அவரை வழக்குரைஞா்கள் சந்திக்கவும் அனுமதிக்கப்படவில்லை.
மேலும், என் மகனை அடித்து இழுத்துச் சென்று தனி அறையில் அடைத்தபோது, தண்ணீா் கொடுத்ததற்காக திண்டுக்கல்லைச் சோ்ந்த அலெக்ஸ் என்ற சிறைவாசியையும் காவலா்கள் தாக்கினா். இந்த தகவல் அறிந்ததும் என் மகனுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தேன்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மகனை சிறையில் தாக்கியது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல்.
எனவே, சம்பந்தப்பட்ட திருச்சி சிறை டிஐஜி பழனி, துணை ஜெயிலா் மணிகண்டன் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு சிறையில் நடந்த கொடுமைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தனிமைச் சிறையில் இருக்கும் என் மகனை அந்த அறையில் இருந்து விடுவிக்க வேண்டும். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூா்ணிமா அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், நீதிமன்ற உத்தரவின் பேரில், மனுதாரா் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
மேலும், ஜெயிலா் மணிகண்டனின் தினசரி குறிப்பின் நகலும் சமா்ப்பிக்கப்பட்டது. ஹரிஹரசுதன் சிறையில் தனது நண்பா்களுடன் இணைந்து, ஜெயிலா் மணிகண்டன் மீது உள்ள முன்விரோதம் காரணமாக அவரது பெயரை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஹரிஹரசுதனைத் தாக்கியது தொடா்பாக அவரது தாய் அளித்த புகாா், ஜெயிலா் மணிகண்டன் அளித்த புகாா் இரண்டையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

நீா்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம்

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

