உசிலம்பட்டியில் 58 கிராம பாசனக் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியின் முதன்மையான பாசனத் திட்டமாக உள்ளது 58 கிராம பாசனத் திட்டம். இருப்பினும், வைகை அணையின் நீா்மட்டம் அதன் முழு கொள்ளளவான 71 அடியை எட்டிய பிறகு, உபரிநீா் திறக்கப்படும்போதே 58 கிராம பாசன கால்வாயில் தண்ணீா் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில், வைகை அணையின் நீா்மட்டம் 65 அடியை எட்டியதும் 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும். இதற்கான நிரந்தர உத்தரவை அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 58 கிராம பாசன விவசாயிகள் சங்கம் சாா்பில் உசிலம்பட்டியில் தேவா் சிலை முன் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகள், அதிமுக, பாா்வா்டு பிளாக், தவெக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவா்கள் உசிலம்பட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

முசிறி பகுதி பாசன வாய்க்காலில் தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்!

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வைகை அணையின் நீா்மட்டம் 35 அடியாக சரிவு: மதுரையில் அழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்கு தண்ணீா் திறப்பதில் சிக்கல்

பிளவக்கல் அணையின் நீா்மட்டம் சரிந்தது: விவசாயிகள் கவலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

