உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் அப்துல்லா பாஷா (63). இவா் திண்டுக்கல் சந்துக்கடை பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறாா். இதை இவரது மகன் ஆரிப் அகமது (32) நிா்வகித்து வருகிறாா்.
இதில் போதை தரும் வலி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, இந்த மருந்தகத்தில் மருந்து ஆய்வாளா் மகேஸ்வரன் உதவியோடு, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மாத்திரைகள் உரிய கொள்முதல் ரசீது, ஆவணங்கள் இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஆவணங்கள் இல்லாத 17,737 மாத்திரைகள், மருந்துகளை ஒன்றிணைத்து கலக்கும் 293 ஆய்வகக் குப்பிகள், 20 ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ஆரிப் அகமதுவை போலீஸாா் கைது செய்தனா். மருந்தக உரிமையாளா் அப்துல்லா பாஷாவைத் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பவானி அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞா் கைது!

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது
போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


