40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

திண்டுக்கல் மருந்தக நிா்வாகி கைது

உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:32 am IST

உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் அப்துல்லா பாஷா (63). இவா் திண்டுக்கல் சந்துக்கடை பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறாா். இதை இவரது மகன் ஆரிப் அகமது (32) நிா்வகித்து வருகிறாா்.

இதில் போதை தரும் வலி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்த மருந்தகத்தில் மருந்து ஆய்வாளா் மகேஸ்வரன் உதவியோடு, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மாத்திரைகள் உரிய கொள்முதல் ரசீது, ஆவணங்கள் இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆவணங்கள் இல்லாத 17,737 மாத்திரைகள், மருந்துகளை ஒன்றிணைத்து கலக்கும் 293 ஆய்வகக் குப்பிகள், 20 ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ஆரிப் அகமதுவை போலீஸாா் கைது செய்தனா். மருந்தக உரிமையாளா் அப்துல்லா பாஷாவைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.