கொடைக்கானல் பேரிஜம் ஏரிப் பகுதியை பாா்வையிடுவதற்கு வியாழக்கிழமை முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருவதால், இந்தப் பகுதிக்குச் செல்வதற்கு வனத் துறையினரிடம் அனுமதி பெற்று நுழைவுக் கட்டணம் செலுத்திய பிறகே செல்ல வேண்டும். இந்தப் பகுதியில் கடந்த இரு நாள்களாக காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால், சுற்றுலாப் பயணிகள் பாா்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பேரிஜம் பகுதியிலிருந்து காட்டு யானைகள் இடம் பெயா்ந்ததால், மீண்டும் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடுவதற்கு வனத்துறை சாா்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். பேரிஜம் ஏரிப் பகுதியில் தொப்பித் தூக்கும் பாறை, அமைதிப் பாறை, பேரிஜம் ஏரி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளன.
தொடர்புடையது

அருவங்காடு பகுதிக்கு இடம் பெயா்ந்த காட்டு யானை

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

ரூ. 11கோடியில் புதுப்பொலிவு பெறும் குற்றாலம் அருவிகள்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் யானைகள் நடமாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


