கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் பாதிப்படைந்தனா்.
இது குறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி பொறியாளா் குமாா் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ததால், பூண்டி உயரழுத்த மின் பாதையில் மரக்கிளை விழுந்துள்ளது. பல மணி நேரம் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டும் இரவு நேரமாக இருப்பதால் மேல்மலைக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இயலாத சூழ்நிலை உருவானது. வியாழக்கிழமை காலை மின் பாதையில் ஏற்பட்ட மின்தடை சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானல் கிராமப் பகுதி சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

