தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.

News image

மின்தடை

Updated On :19 மார்ச் 2026, 12:29 am

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் பாதிப்படைந்தனா்.

இது குறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி பொறியாளா் குமாா் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ததால், பூண்டி உயரழுத்த மின் பாதையில் மரக்கிளை விழுந்துள்ளது. பல மணி நேரம் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டும் இரவு நேரமாக இருப்பதால் மேல்மலைக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இயலாத சூழ்நிலை உருவானது. வியாழக்கிழமை காலை மின் பாதையில் ஏற்பட்ட மின்தடை சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.