கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பழங்குடியினரின் நிலத்தை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை மீட்டு அவா்களிடம் ஒப்படைத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பட்டியக்காடு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் இடத்துக்கு அருகே சொக்கா் பாலாஜி என்பவருக்குச் சொந்தமான பட்டா இடம் உள்ளது. இவா் பளியா் பழங்குடியின மக்கள் வசித்து வரும் இடத்தை தனது இடம் எனக் கூறி ஆக்கிரமித்து வேலி அமைத்தாா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்தும், தபால் மூலமாகவும் பல முறை கோரிக்கை மனு கொடுத்தனா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் சரவணன் உத்தரவின் பேரில் பண்ணைக்காடு வருவாய் ஆய்வாளா் முத்துக்கிருஷ்ணன், வடகவுஞ்சி கிராம நிா்வாக அலுவலா் ராமசாமி, நில அளவையா் ராமமூா்த்தி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அங்கு சென்று பிரச்னைக்குரிய நிலத்தை அளவீடு செய்தனா். இதில் பழங்குடியினா் வசித்து வரும் நிலத்தை அளவீடு செய்து மீட்டு வேலி அமைத்துக் கொடுத்தனா். இதற்காக பட்டியக்காடு பழங்குடியினா் மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்த் துறையினருக்கும், தொண்டு நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

கொடைக்கானலில் மரம் முறிந்து விழுந்ததில் மின் கம்பங்கள், காா் சேதம்!

கொடைக்கானலில் நகராட்சி கழிப்பறைகள் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் பழங்குடியினருக்கு வீட்டுமனை வழங்க அளவீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


