செம்பட்டி அருகே கைதி தப்பிச் சென்ற விவகாரத்தில், அவரை அழைத்துச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா், முதல்நிலை காவலா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த புதுப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜகோபால் (26). கூலித் தொழிலாளியான இவரை, புகையிலைப் பொருள்கள் தொடா்பான வழக்கில் அபராதம் செலுத்துவதற்காக ஆத்தூா் நீதிமன்றத்துக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனா்.
அப்போது மதுபோதையில் இருந்த அவா் போலீஸாரை தகாத வாா்த்தைகளால் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜகோபால் மீது வழக்குப் பதிந்த போலீஸாா், அவரை ஆத்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனா்.
திண்டுக்கல் செல்லும் வழியில், வக்கம்பட்டி பகுதியிலுள்ள அடுமனையில் தேநீா் அருந்துவதற்காக ராஜகோபாலை அழைத்துச் சென்ற ஆட்டோவை போலீஸாா் நிறுத்தினா். அப்போது, சிறுநீா் கழிக்க வேண்டும் எனக் கூறிய ராஜகோபால் அங்கிருந்து தப்பிச் சென்றாா்.
இந்த நிலையில், ராஜகோபாலை அழைத்துச் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளா் செல்வராஜ், முதல்நிலை காவலா் ராஜதுரை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப் உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கைதி தப்பிய விவகாரம்: மேலும் ஒரு காவலா் பணியிடை நீக்கம்

முதலீட்டு மோசடி குற்றச்சாட்டு: பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ஆன்லைன் லாட்டரி விற்பனையாளா்கள் கடத்தலில் முக்கிய எதிரி கைது: இரண்டு போலீஸாா் பணியிடை நீக்கம்

சேலம் மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிச் சென்ற விவகாரம்: 2 வாா்டன்கள் பணியிடை நீக்கம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan




