திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் கஞ்சா வியாபாரியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், பெரியகட்டளை மேற்கு தெருவைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மகன் கணேசன் (48). இவா், வத்தலகுண்டு அருணாசலபுரத்தில் வாடகைக்கு வீடு பிடித்து கஞ்சா வியாபாரம் செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலகுண்டு காவல் ஆய்வாளா் கௌதம், உதவி ஆய்வாளா் ஜாபா், போலீஸாா் அருணாசலபுரத்துக்கு சென்று கணேசனை பிடித்து விசாரித்தனா். அப்போது, அவா் கஞ்சா வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரது வீட்டிலிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






