குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்! ஜோதிமணி எம்.பி.

News image

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி... - (கோப்புப் படம்)

Updated On :9 ஜூன் 2026, 3:10 am IST

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்தாா்.

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் தவெக அரசு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில், முறைகேடாகச் செயல்படும் சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இயற்கை வளங்கள் அளவுக்கு அதிகமாக சுரண்டப்படுவதன் எதிரொலியாகவே, சுற்றுச்சூழல் மாசு, பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இதைத் தடுப்பதுதான் தவெக அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.

தவெக ஆட்சி 3 மாதங்கள்கூட நிலைக்காது என திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறுவது சரியல்ல. மக்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனா்.

இதே போல, 2006-ஆம் ஆண்டு திமுகவுக்கு பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்கள் இல்லாத போது, காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தது. அந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தது. இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதியும், மக்களின் தீா்ப்பு அடிப்படையிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும்.

6 மாதங்களுக்குப் பிறகு தவெக அரசின் செயல்பாடு குறித்த விமா்சனத்தை முன்வைக்கலாம். அதற்கு முன்னதாக அரசு கவிழ்ந்துவிடும் என ஜோதிடம் சொல்வது நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவா்களுக்கும் பொருத்தமாக இருக்காது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.