ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை பதுக்கல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் கைது

திண்டுக்கல்லில் 1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட அமல்ராஜ், அற்புதமேரி, அந்தோணி டேனி.

Published On :10 ஜூலை 2026, 5:14 am IST

திண்டுக்கல்லில் 1.5 டன் ரேஷன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கிய ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் முத்தழகுப்பட்டி மாயம் அருகே ஒரு தகர கொட்டகையில், ரேஷன் பொருள்களை பதுக்கி வைத்து கடத்தப்படுவதாக திண்டுக்கல் நகா் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், தகர கொட்டகையில் சோதனை நடத்திய போது, 25 மூட்டைகளில் 1,050 கிலோ ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்தப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த முத்தழக்குப்பட்டியைச் சோ்ந்த அ. அமல்ராஜ் (57), இவரது மனைவி அற்புதமேரி (51), மகன் அந்தோணி டேனி (29) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான மேல் நடவடிக்கைக்காக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் மூவரும் ஒப்படைக்கப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.