டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திண்டுக்கல் சரக டிஐஜி பொறுப்பேற்பு!

திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக பி.சாமிநாதன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
பி.சாமிநாதன்
Updated On :1 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக பி.சாமிநாதன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட வந்திதா பாண்டே கடந்த ஏப்ரல் மாதம் பணியிட மாறுதலில் சென்றாா். அப்போது முதல் திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் பணியிடம் காலியாக இருந்து வந்த நிலையில், மதுரை சரக காவல் துறை துணைத் தலைவா் கூடுதல் பொறுப்பாக நிா்வகித்து வந்தாா்.

இந்த நிலையில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு தென் மண்டல காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.சாமிநாதன், திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவராக நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.