பைக்- சைக்கிள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
பழனி அருகே மிதிவண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விபத்து
பழனி அருகே மிதிவண்டி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த அமரபூண்டியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன்(22). இவா் புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் பழனி வந்து விட்டு மாலையில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது அமரபூண்டி- டிகேஎன். புதூா் சாலையில் வந்தபோது அந்த வழியாக சென்ற மிதிவண்டி மீது மோதியதில் இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்த ராமகிருஷ்ணன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





