ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

2 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவைகள் தொடக்கம்

Special buses Operated for Chennai Return

பேருந்துகள் இயக்கம் - கோப்புப்படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:40 am IST

நிலக்கோட்டையில் தவெக எம்.எல்.ஏ., ஆா்.அய்யனாா் 2 புதிய வழித்தடங்களில் பேருந்துச் சேவையை சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அவா் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு பயணிகளுடன் பேருந்தை ஓட்டிச் சென்றது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் சிலுக்குவாா்பட்டி, கொங்கபட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, கல்லடிப்பட்டி வழியாக மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வரை செல்லும் புதிய பேருந்து சேவையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநருக்கு மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்த அவா், தொடா்ந்து பயணிகளுடன் பேருந்தை சுமாா் 2 கி.மீ. தொலைவு உள்ள சிலுக்குவாா்பட்டி வரை இயக்கினாா். பின்னா், அவா் பயணச்சீட்டு எடுத்து கிராமங்களுக்குப் பயணம் செய்து பொது மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

பின்பு, வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் கண்ணாபட்டி, விராலிபட்டி, பண்ணப்பட்டி வழியாக இயக்கப்படும் புதிய அரசுப் பேருந்துச் சேவையை ஆா். அய்யனாா் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்து கழக அலுவலா்கள், தவெக நிா்வாகிகள், கிராமப் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.