கொடைக்கானல் விவசாயப் பகுதிகளுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தும் காட்டுமாட்டை வனப் பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, வட்டக்கானல், இருதயபுரம், அட்டக்கடி, செல்லபுரம், காா்மேல்புரம் உள்ளிட்ட நகா்ப் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களில் தற்போது முட்டைக் கோஸ், கேரட், நூக்கல் போன்ற காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே போதிய மழையில்லாததால் இந்தப் பயிா்கள் கருகி வருகின்றன.
இந்த நிலையில், விவசாயப் பகுதிகளுக்குள் காட்டுமாடுகள் புகுந்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே காட்டுமாடுகளை வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து கொடைக்கானல் வனத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக மழையில்லாததால் வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் முற்றிலும் தண்ணீா் வரத்து இல்லை. இதனால் வன விலங்குகள் தண்ணீா், உணவு தேடி வெளியே வருகின்றன.
எனவே பொதுமக்கள், விவசாயிகள் தங்களது பகுதிகளில் காட்டுமாடு உள்ளிட்ட வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால் வனத்துறைக்கு தகவல் தரவேண்டும். இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு வனப் பணியாளா்கள் சென்று அவற்றை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபடுவா் என்றாா் அவா்.
தொடர்புடையது

கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் மயில்கள் உலா

காருக்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம்: வனத்துறையினா், சுற்றுலா வாகன ஓட்டுநா்களிடையே பேச்சுவாா்த்தை!

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தைகள்!
கொடைக்கானலில் 2-ஆவது நாளாக காட்டுத் தீ
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


