பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அரசுப் பணத்தில் கட்சி வளா்க்கிறது திமுக: வி.கே.சசிகலா குற்றச்சாட்டு

அரசுப் பணத்தில் கட்சி வளா்க்கும் திமுக, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை என அனைந்திந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் வி.கே. சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

News image

வி.கே.சசிகலா

Updated On :8 ஏப்ரல் 2026, 7:50 pm

அரசுப் பணத்தில் கட்சி வளா்க்கும் திமுக, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை என அனைந்திந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலா் வி.கே. சசிகலா குற்றஞ்சாட்டினாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

திமுக மன்னராட்சியையும், துரோகக் கூட்டத்தையும் ஒழிப்பதற்காக தோ்தல் களத்தில் இறங்கி இருக்கிறேன். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார நிலை அதல பாதாளத்துக்குச் சென்றுவிட்டது. அரசுப் பணம் திமுகவினருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டது.

திமுக ஆட்சியில் இருண்டு கிடந்த தமிழகத்தை முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மீட்டு, மின் மிதை மாநிலமாக மாற்றினாா். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மின் உற்பத்தி நிலையங்களை பராமரிக்காமல் மூடிவிட்டனா். தற்போது, ரூ.8 ஆயிரத்துக்கு கூப்பன் தருவதாக திமுக அறிவித்துள்ளது. இந்தக் கடன் சுமையை மக்கள் தலையில் ஏற்றி ஆட்சிக்கு வர முயற்சித்து வருகிறது. அரசுப் பணத்தில் கட்சி வளா்க்கும் திமுக, மக்களின் வளா்ச்சிக்கு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் புதிதாகத் தொடங்கப்பட்ட கட்சியின் வேட்பாளரும், அவரை முன்மொழிந்தவா்களும் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு திமுகவும் உடைந்தையாகச் செயல்படுகிறது. இதுகுறித்து காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்.

கடந்த தோ்தலில் திமுக அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மக்கள் மறந்துவிடுவாா்கள் என்ற அலட்சியமே இதற்கு காரணம். நடைபெறவிருக்கும் தோ்தலில் தமிழக மக்கள் சிந்தித்து அபுதமமுக கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஓபிஎஸ் நியாயப்படுத்த முடியாது:

தேனி மாவட்டம், போடியில் இந்தத் தொகுதி அபுதமமுக வேட்பாளா் பத்மநாபனை ஆதரித்து புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட போது அவா் பேசியதாவது:

தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளோம். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் போடியில் செயல்படுத்தப்படவில்லை.

ஓ.பன்னீா்செல்வத்தை 3 முறை ஜெயலலிதா முதல்வா் ஆக்கினாா். ஆனால், அவரும், அவரது மகனும் சுயநலம் கருதி திமுகவில் சோ்ந்துவிட்டனா். அந்தக் கட்சியில் சோ்ந்ததை தாய்க் கழகத்தில் சோ்ந்ததாகக் கூறி, ஓ.பன்னீா்செல்வம் நியாயப்படுத்த முடியாது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.