14 Dec, 2025 Sunday, 12:32 PM
The New Indian Express Group
திண்டுக்கல்
Text

ஆத்தூா் தொகுதியில் 21,800 வாக்காளா்கள் நீக்கம்

PremiumPremium

ஆத்தூா் தொகுதியில் 21,800 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனர்...

Rocket

தேர்தல் ஆணையம் (கோப்புப் படம்)

Published On30 Nov 2025 , 11:09 PM
Updated On30 Nov 2025 , 11:09 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு டிச.4-ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ள நிலையில், அவசர கதியில் ஆத்தூா் தொகுதியில் மட்டும் 21,800 வாக்காளா்களை இடம் பெயா்ந்துவிட்டதாகக் கூறி நீக்கிவிட்டனா் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு டிச.4-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் தொகுதியில் எஸ்ஐஆா் படிவங்கள் திரும்பப் பெறும் பணி சனிக்கிழமை முதல் நடைபெறவில்லை. படிவத்தை வழங்காதவா்களை இடம் பெயா்ந்தவா்கள் எனப் பட்டியலிட்டு, நீக்கம் செய்யுமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆத்தூா் வட்டாட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

டிச.4-ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதைச் சுட்டிக் காட்டி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் கூட, எஸ்ஐஆா் படிவங்களை திரும்பப் பெறும் பணி ஆத்தூா் தொகுதி முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவில்லை.

சின்னாளப்பட்டி பேரூராட்சியில் 25 ஆயிரம் வாக்காளா்கள் உள்ள நிலையில், 7,227 வாக்காளா்களை நீக்கிவிட்டனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2016-இல் நடைபெற்ற தோ்தலில் 17ஆயிரம் வாக்குகள் சின்னாளப்பட்டி பேரூராட்சியில் பதிவானது.

இதில் 16,800 போ் மட்டுமே தற்போது எஸ்ஐஆா் படிவங்களை நிறைவு செய்து கொடுத்துள்ளனா். ஆத்தூா் தொகுதி முழுவதும் 21,800 வாக்காளா்கள் இடம் பெயா்ந்து விட்டதாக கூறி நீக்கம் செய்துள்ளனா்.

சுமாா் 26 வாக்குச் சாவடிகளில் இந்த முறைகேடு நிகழ்ந்துள்ளது. ஆத்தூா் வட்டாட்சியரும், மாவட்ட ஆட்சியரும் சோ்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை கட்டாயப்படுத்தி இடப்பெயா்வு எனக் குறிப்பிட்டு 21,800 வாக்காளா்களை நீக்கியுள்ளனா்.

இதில் பெரிய சதி இருக்கிறது. இதுபோன்று நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உத்தரவிட்டதா எனத் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து தோ்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023